News May 15, 2024
பேருந்து நிலையத்தில் பொழுதுபோக்கு அரங்குகள்

புதிதாக அமைக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வணிக வளாகத்திற்கு பொதுமக்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சை: புதிய புகார் மனு

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில், சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு ஒன்றை இன்று அளித்தனர். அதில் இன்னும் 2 நாளில் மலை மீது உள்ள தர்கா சார்பாக சந்தனக்கூடு நடைபெற உள்ளது. தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மலை மீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என புகார் அளிக்கப்பட்டது.
News December 18, 2025
மதுரை TaTa COATS நிறுவனத்தில் வேலை ரெடி.!

மதுரையில் உள்ள TaTa COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWorks பணியிடத்திற்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். ஐடிஐ, டிப்ளமோ முதல் ஏதேனும் ஒர் டிகிரி படித்தவர்கள் ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரிய 89258-97701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
மதுரை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

மதுரை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!


