News March 5, 2025
பேருந்து நிலையத்திற்குள் பயணியிடம் கைவரிசை – நான்கு பேர் கைது

புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா நேற்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது மர்ம நபர் ஒருவர் இவரது பாக்கெட்டில் பணத்தை எடுப்பதைப் பார்த்து திருடன் திருடன் என கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவனுடன் சேர்ந்த மேலும் மூன்று நபர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News October 20, 2025
திருச்சி: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு

திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்
1. திருச்சி – 0431-2462101
2. ஸ்ரீ ரங்கம் – 0431-2432300
3. லால்குடி – 0431-2542101
4. மணப்பாறை – 04332-260501
5. திருவெறும்பூர் – 0431-2902002
6. சமயபுரம் – 0431-2670373
7. துறையூர் – 04327-222401
8. முசிறி – 04326-26029
9. வையம்பட்டி – 04332-272101
10. புள்ளம்பாடி – 04329-241380
11. துவரங்குறிச்சி – 04332-254101
12. உப்பிலியபுரம் – 04327-252101
News October 20, 2025
திருச்சி: நூலிழையில் உயிர் தப்பிய நபர்

திருச்சி மாநகரில் இயக்கப்படும் தனியார் டவுன் பேருந்துகள், நகர் பகுதியில் அதிவேகமாக செல்லும் காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காந்தி மார்கெட்டில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று காஜாமொய்தீன் வீதி சந்திப்பு பகுதியில் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர் நூலிழையில் உயிர்தப்பினார்.
News October 20, 2025
திருச்சி: அரசு பஸ் மோதி மாணவன் பலி

லால்குடி அருகே மேலரசூர் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் (17). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று முன்தினம் தனது டூவீலரில் சிதம்பரம் சாலையில் இருதயபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அலெக்ஸ் பாண்டியன் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.