News May 17, 2024
பேருந்துகளை பராமரிக்க ஓட்டுநர்களுக்கு உத்தரவு

கோடை மழைக் காலம் என்பதால் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி இருந்தால் ஓட்டுநர்கள் பேருந்துகளை கவனமாக ஓட்ட வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் – பேருந்துகளில் நீர் கசிவு, நீர் உள்ளே புகுதல் மற்றும் சாய்வு இருக்கை சரி வர இயங்கவில்லை என பயணிகள் கூறும் குறைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதை சரி செய்ய வேண்டும் என இன்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
கோவை: பட்டா மாற்றம், திருத்தம் ஆன்லைனில்!

கோவை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News August 21, 2025
கோவையில் 56 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 92 டாஸ்மாக் பார்களுக்கான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வு, மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், மாவட்ட அளவில் உள்ள 92 பார்களில், 36 பார்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 பார்களுக்கு யாரும் ஏலம் எடுக்க விண்ணப்பிக்கவில்லை.
News August 21, 2025
கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.