News August 5, 2024
பேராசையில் ரூ.43 லட்சம் மோசடி

புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி. இவரை டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணைய வழி பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.23.89 லட்சத்தையும் அதன் பிறகு, மீண்டும் ரூ.18.39 லட்சத்தை அவா் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 29, 2026
புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
முத்திரையர்பாளையம்: ஆயிகுளம் மேம்பாட்டுப் பணிக்கு பூமி பூஜை

இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையத்தில் சுமார் 3.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிகுளம் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். மேலும், புதிதாக பெரிய வாய்க்கால் அமைக்கும் பணி ரூ.1.76 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொகுதி ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


