News March 22, 2024
பேரளம் சிவன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பேரளம் தருமையாதீனத்திறகுச் சொந்தமான ஸ்ரீ பவானியம்மன் சமேத ஸ்ரீ சுயம்புநாதஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சிவன் மற்றும் அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தருமையாதீனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலையும் தொடங்கி வைத்தார்.
Similar News
News November 14, 2025
திருவாரூர்: முன்னால் அமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னால் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் எம்எல்ஏ, இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குழந்தைகள் நம் தேசத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம், குழந்தைகள் எல்லோரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கல்வி விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்திலும் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
திருவாரூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
திருவாரூர்: ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்ட தவெகவினர்

புதிய வாக்காளர் திருத்த சட்டத்தை (SIR) எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் வரும் நவம்பர் 16 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி, அதற்கு அனுமதி வழங்க கோரி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் இன்று மனு வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் மற்றும் வழக்கறிஞர் மதிவாணன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


