News December 18, 2025
பேச்சிப்பாறையில் யானைகள் நடமாட்டம்

கடந்த சில நாட்களாக குமரி ரப்பர் கழக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மைலாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 51-ல் 7 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் நடமாடியது. இதனால் ரப்பர் தோட்டத்தில் பால்வடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் தொழிலாளர்களின் தொடர் கூச்சல் காரணமாக யானைகள் பேச்சிப்பாறை அணையின் கரை வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்றன.
Similar News
News December 21, 2025
குமரி மக்களே.., ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?

குமரி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 21, 2025
குமரி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்!

படர்ந்தாலு மூடு அருகே பூவ காட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் ராஜ் (25) இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் வழக்கு உள்ளது.அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சஜின் ராஜ் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News December 21, 2025
குமரி: பெண்ணின் ஆபாச வீடியோவை பரப்பிய இளைஞர்!

மதுரை அம்பேத்கார் தெரு அஜித்குமார்(23), பொன்மனை 20 வயது பெண்ணுடன் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமாக பழகியுள்ளார். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் அவரிடமிருந்து விலகினார். இதனால் அஜித்குமார் அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய வீடியோக்கள், ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். குமரி சைபர் கிரைம் போலீசார் அஜிக்குமாரை நேற்று செய்தனர்.


