News November 20, 2025

பெருந்துறை தொழிலாளி உடல் அழுகிய நிலையில் மீட்பு!

image

பெருந்துறை துடுப்பதி சுள்ளிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (53). விசைத்தறி தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பழனிசாமி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 20, 2025

ஈரோடு வருகை தந்த உலககோப்பை!

image

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான வெற்றி கோப்பை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் புஞ்சை புளியம்பட்டிக்கு வருகை தந்த உலக கோப்பைக்கு துணை ஆட்சியர் சிவானந்தம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோப்பை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

News November 20, 2025

ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 20, 2025

ஈரோடு : ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர்.இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் செய்து <<>>Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

error: Content is protected !!