News April 7, 2025

பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

image

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Similar News

News April 7, 2025

வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் 3வது நபர் கைது

image

பர்கூர் வனப்பகுதியில் மார்ச் 30ம் தேதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரிந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷ் (32) மற்றும் ராஜேந்திரன் (48) என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குமார் என்பவரை பர்கூர் போலீசர் தற்போது கைது செய்துள்ளனர்.

News April 7, 2025

ஈரோட்டில் 3 மாதங்களில் மட்டும் 19 பேர் பலி

image

ஈரோடு ரயில் நிலையங்களை சுற்றி கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 18 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலனோர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு உயிரிழந்ததாகவும், இது போன்ற விபத்துகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

News April 7, 2025

இறைச்சி சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

image

ஈரோடு, பவானியைச் சேர்ந்த முனீஸ் என்பவரது மகள் வர்ஷினி (13). இவருக்கு நேற்று இறைச்சி சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்ய பவானி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலதாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் அந்தியூர் பவானி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!