News January 22, 2025

பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News September 14, 2025

செங்கல்பட்டு அருகே கார் மோதி இளைஞர் பலி

image

மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரத்தைச் சேர்ந்தவர் லதாராம் (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து விட்டு ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

செங்கல்பட்டு: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை, மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணி, கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக அணுகலாம்.

News September 14, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!