News December 24, 2025
பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்னும் எரிக்கிறது: கமல்

பெரியார், MGR, தொ.பரமசிவன் ஆகிய 3 ஆசிரியர்களையும் இன்றைய நினைவுநாளில் மனம் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரியார் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு அரை நூற்றாண்டு கடந்தும் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதாகவும், தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் MGR வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளிபாய்ச்சியவர் தொ.பரமசிவன் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.
Similar News
News January 1, 2026
ராமதாஸ், அன்புமணியை ஒன்று சேர்ப்பேன்: ஜான்பாண்டியன்

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு தான் மிகவும் மன வருத்தப்பட்டதாக ஜான்பாண்டியன் கூறியுள்ளார். ராமதாஸை வன்னியர்களுக்காக போராடிய போராளி என குறிப்பிட்ட அவர், தந்தையும் மகனும் இணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர், இருவரையும் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
இனி வீடுகளில் பணம் வைத்திருக்க கூடாதா? CLARITY

புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் படி, 2026 ஏப்ரல் முதல், வீட்டில் அதிக பணம் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உலாவரும் செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வராது எனவும், முன்பு இருந்த சட்ட நடைமுறைகளை எளிமையாக்குவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளது. அனைவரும் தெரிஞ்சுக்கணும் SHARE THIS.
News January 1, 2026
புதிய பொருளாதார கோட்பாடு அவசியம்: கவர்னர் RN ரவி

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்று கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பொருளாதார சங்க மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியாத பாதையில் பயணிப்பதாக தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளின் அளவுகோல்களை வைத்தே, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுவதாக கூறிய அவர், உண்மையான வளர்ச்சியை அறிய, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.


