News January 20, 2025

பெரியார் சீர்திருத்தவாதி அல்ல : ஜான் பாண்டியன்

image

தமிழகத்தின் சீர்திருத்தவாதி என்று பெரியாரை சொல்லக்கூடாது என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தீண்டாமையை பெரியார் தான் ஒழித்தார் என்பதை ஏற்க முடியாது; தீண்டாமை தற்போதும் உள்ளது எனக் கூறிய அவர், காலம் மாறியதால் எழுச்சி தானாக உருவானது; பெரியாரால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஆளுங்கட்சியை பார்த்து தாங்கள் பயப்படவில்லை என கூறியுள்ளார்.

Similar News

News March 29, 2026

பாஜக ஆட்சியில் இறைச்சிக்கு NO: மம்தா பானர்ஜி

image

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் மீன் உண்பதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட முடியாது என கூறினார். மேலும் கலவரத்தை தூண்டி, மக்களை கொன்று பாஜக ஆட்சிக்கு வருவதாகவும், பிற மாநிலங்களில் பெங்காலி பேசும் மக்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதாகவும் சாடியுள்ளார்.

News March 29, 2026

மீண்டும் விஜய் – த்ரிஷா சர்ச்சை.. புதிய PHOTO

image

சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சையில் விஜய் – த்ரிஷாவை இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்ட சமயத்தில், மஞ்சள், சிவப்பு உடையில் இருக்கும் போட்டோவை த்ரிஷா SM-ல் பகிர்ந்துள்ளார். இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், த்ரிஷா ஒன்றும் சும்மா அந்த கலரில் உடை அணியவில்லை, உள்நோக்கத்துடனேயே அணிந்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News March 29, 2026

‘வயாகரா’.. எப்படி உருவானது தெரியுமா!

image

சில நேரங்களில் ஒரு நோய்க்காக உருவாக்கப்பட்ட மருந்து, மற்றொரு நோய்க்கு தீர்வாக மாறும். 1990-களில் இதய நோய் சிகிச்சைக்காக ஃபைசர் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ‘சில்டெனாஃபில்’ மருந்து, பரிசோதனையின்போது பக்க விளைவாக நீண்டநேர விறைப்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவ உலகில் திருப்புமுனையாக அமைந்ததோடு, வயாகரா என்றும் அறியப்படுகிறது. இது தற்செயலான கண்டுபிடிப்பு என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.

error: Content is protected !!