News November 8, 2025
பெரியார், அண்ணா போல பணியாற்றும் உதயநிதி: CM

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் DCM உதயநிதி என திமுக நடத்தும் அறிவு திருவிழாவில், ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்ட அவர், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
ஆதார் கார்டில் மாற்றம்… இனி வீட்டில் இருந்தே செய்யலாம்!

இந்தியாவின் முக்கிய அரசு ஆவணமாக உள்ள ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய, ஆதார் மையங்களுக்கே நேரில் செல்ல வேண்டும். ஆன்லைனில் செய்யலாம் என்றாலும், கைரேகை, முக அடையாளத்தை பதிவு செய்ய நேரில் தான் செல்ல வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் ஒரு புதிய ஆப்பை (e-Aadhaar) அறிமுகம் செய்ய உள்ளது. இதில், AI மூலம் கைரேகை, முக அடையாளம் உறுதிப்படுத்தப்படும். டிசம்பர் இறுதிக்குள் இந்த வசதி அறிமுகமாக உள்ளது.
News November 8, 2025
உண்மையில் DNA வடிவத்தை கண்டுபிடித்தது யார்?

டபுள் ஹெலிக்ஸ் DNA-வை கண்டுபிடித்தவர் <<18233802>>ஜேம்ஸ் வாட்சன்<<>> அல்ல. இவருக்கு முன்பே ரோசலிண்ட் பிராங்க்லின் என்ற பெண் இதனை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது. UK-வின் கிங்ஸ் காலேஜில் DNA-வின் படத்தை ரோசலிண்ட் வைத்திருந்தார். அந்த காலேஜுக்கு வாட்சனும் அவரது ஜூனியர் கிரிக்கும் சென்றபோது அதனை பார்த்ததாகவும், அதை வைத்தே டபுள் ஹெலிக்ஸ் வடிவத்தை கண்டுபிடித்து, நோபல் பரிசும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
News November 8, 2025
இடி மின்னலால் தடைபட்ட IND VS AUS ஆட்டம்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடி மின்னலின் தாக்கத்தால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தற்போது வரை மழை பெய்யாததால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்துள்ளது.


