News February 22, 2026
பெரியகுளம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த சரவணபெருமாள் என்பவரது மகள் ஜெய ஸ்ரீ (18) கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிப்.17 அன்று விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தேர்வில் சரியான மார்க் எடுக்காததால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News February 27, 2026
BREAKING: திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

மூன்று முறை முதல்வர் பதவி வகித்த ஓபிஎஸ் 2022ல் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்று தனிப்பயணம் மேற்கொண்ட அவர் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது மகனும் முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
News February 27, 2026
தேனி: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னும் சற்றுநேரத்தில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டேன் என EPS மறுத்துவிட்டார். தவெக பக்கம் செல்லவும் OPS-க்கு விருப்பம் இல்லாததால் எதிர்கால தனது அரசியல் பயணம் கருதி இம்முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
News February 27, 2026
தேனி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (22) பெரியகுளம் பகுதியில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கல்லூரி முடிந்து அவரது பைக்கில் வீடு திரும்பிய நிலையில் பெரியகுளம் சாலையில் உள்ள வேகத்தடையில் வேகமாக வந்த பைக் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தியாகராஜன் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு.


