News September 13, 2025

பெரம்பலூர்: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

பெரம்பலூர் மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் இதற்கு APPLY பண்ணலாம். இதற்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.

Similar News

News September 13, 2025

பெரம்பலூர்: உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ் அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘<>TN Food Safety Consumer App<<>>’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய பெரம்பலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT NOW…

News September 13, 2025

பெரம்பலூர்: விஜய் வருகை-முன்னேற்பாடுகள் தீவிரம்

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (13-09-2025) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பலூர் வருகை தருவதை முன்னிட்டு துறைமங்களம், வானொலி திடல், பெரம்பலூர் நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டும், கொடிகள் கட்டப்பட்டும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

News September 13, 2025

பெரம்பலூர்: இழப்பீடு பணத்தை ஏமாற்றிய 2 பேர் கைது

image

ஒகளூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (28) என்பவர் தனது தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்த போது உடல்நிலை சரியில்லாமல் சொந்த ஊருக்கு அனுப்பி, அவரது வங்கி கணக்கிற்கு ரூ.19,09,004 இழப்பீட்டு தொகையாக வெளிநாட்டில் இருந்து கிடைத்ததாகவும், அதனை தனது அண்ணி, அவரது உறவினர்கள் சேர்ந்து தனக்குத் தெரியாமல் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், கதிர்வேல் (65), ராஜேஸ்வரி (52) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!