News January 15, 2025

பெரம்பலூர்: 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (35). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது நேற்று (ஜன.13) தெரியவந்தது. தற்போது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

பெரம்பலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<> இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

News January 26, 2026

பெரம்பலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 25, 2026

பெரம்பலூரில் வாகன பிரச்சாரத்தில் காவலருக்கு சிரமம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கொடியசைத்து, வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லக்கூடிய வாகனத்தில் உரிய இருக்கை வசதி இல்லாததால், பெண் போலீஸ் ஒருவர் அவதிப்பட்டு, துப்பாக்கியை பிடித்த நிலை உருவானது. பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

error: Content is protected !!