News November 4, 2025

பெரம்பலூர்: 11.11.2025 இந்த தேதியை மறக்காதீர்!

image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.11.2025-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு!

image

பெரம்பலூர் அருகே எசனை போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (75). இவர் நேற்று முன்தினம் மாலை 4 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

பெரம்பலூரில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

image

பெரம்பலூரில் மாவட்டத்தில் 16 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே Click செய்க<<>>
மற்றவர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க!

News November 4, 2025

பெரம்பலூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <>இ-பெட்டகம் என்ற செயலியில்<<>> உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) SHARE NOW!

error: Content is protected !!