News November 15, 2025

பெரம்பலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

image

அரியலூர் மாவட்டம், பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் குன்னம் அருகே தங்கநகரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியில் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நேற்று (நவ-14) விழிப்புணர்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும் கடைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நகை கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

News November 15, 2025

பெரம்பலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், அரும்பாவூர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வளர் இளம் பருவ மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் கல்வி மற்றும் நன்னெறிகள் குறித்து பேசப்பட்டது. இதில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா, பால்வினை நோய்கள் குறித்து உரையாற்றினார்.

News November 15, 2025

பெரம்பலூர் : கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!