News January 4, 2026
பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.09) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் வழங்கி தீர்வு காணலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
பெரம்பலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி., பேங்கிங் போன்ற மத்திய அரசு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க!


