News November 7, 2025
பெரம்பலூர்: மேம்பாலம் அருகே கிடந்த சடலம்

பெரம்ப–லூர் துறைமங்கலம் மேம்பாலம் அருகே நேற்று காலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி இறந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
பெரம்பலூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 7, 2025
பெரம்பலூர் மக்கள் கவனத்திற்கு…

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் நவ.11 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


