News March 7, 2026

பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் வருகிற மார்ச் 10-ம் தேதி காலை 11 மணிக்கு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு தொடர்பான பிரச்சனைகளும் இங்கு விவாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

பெரம்பலூர்: தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

image

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினரான BSF வீரர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அனிதா, தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் தங்கியுள்ள BSF வீரர்களை நேரில் சந்தித்து, தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

News March 11, 2026

பெரம்பலூர்: 12 கிலோ கஞ்சா கடத்தல்-இருவர் கைது

image

பெரம்பலூர், வழியாக கஞ்சா கடத்தி செல்லப்போவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் ராஜ்குமார் (36), யாட்லா துர்கா ராவ் (32) ஆகிய இருவரும் சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக சிவகாசிக்கு கடத்தி செல்வதாக தெரிந்த நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 10, 2026

பெரம்பலுர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே <<>>க்ளிக் செய்யுங்க. SHARE IT

error: Content is protected !!