News October 27, 2025

பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

image

பெரம்பலூர், தேனூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (57) விவசாயி, இவர் நேற்று இரவு வயலில் மின் மோட்டார் பெட்டியில் பழுதான ஒயரை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கராஜ் உடலை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 27, 2025

பெரம்பலூர்: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து பயனர் உள்நுழைவில் ரேஷனில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 27, 2025

பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை (28.10.2025) மாதந்திர பராமரிப்புபணி நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, கொளக்காநத்தம், பாடலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின் தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

தேசிய அளவிலான நீச்சல் போட்டி, பெரம்பலூர் மாணவி தேர்வு

image

சென்னை வேளச்சேரியில் நேற்று (அக்.25) 6வது ஜூனியர் & 11வது சீனியர் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி (CwD Dwarfism) ஜீவா, 3 தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் இவர் வரும் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நேஷனல் அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

error: Content is protected !!