News June 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News September 10, 2025
காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான திருச்சி, திருச்சி மாநகரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (செப்.,9) பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.
News September 9, 2025
பெரம்பலூரில் ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில், (செப்டம்பர் 09- 2025 ) நேற்று ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்கள். பிறகு அனைவரும் சேர்ந்து கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்று மனு கொடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
News September 9, 2025
பெரம்பலூரில் இந்த தேதியை குறித்து வைச்சிக்கோங்க!

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் பயன் பெற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்கள் பங்கு பெற்று தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். நடைபெறும் நாள் ( 10.09.2025 ) குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. முதிவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம். SHARE பண்ணுங்க