News December 25, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் 29.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறவுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், இன்று (26.12.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கினால் கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
News December 26, 2025
பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மதுரகாளியம்மனுக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


