News October 22, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

பெரம்பலூர், மாவட்ட கலெக்டர் மிருணாளினி பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விடுத்துள்ள அறிவுரையில், டெங்கு, மலேரியா, மற்றும் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் இருக்க குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும், வீட்டினை சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும், மேலும் மழைநீர் தேங்காத வண்னம் பார்த்துக் கொள்ள வேண்டும், மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும்.

Similar News

News October 24, 2025

பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News October 23, 2025

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

News October 23, 2025

பெரம்பலுர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

பெரம்பலுர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!