News December 30, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி, கூத்தூர், கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (30-12-2025) மாதந்திர பராமரிப்புபணி நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் இணைப்பு பெறும் பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்நிலைய செயற்பொறியாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
பெரம்பலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
பெரம்பலூர்: பறவைக் காய்ச்சல் குறித்து அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நன்கு சமைக்காத முட்டை மற்றும் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஆட்சியர் மிருணாளினி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்துப் பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
பெரம்பலூர்: டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் தீபக் (20). இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூரில் உள்ள அரிசி ஆலை ஒன்றுல் உமி ஏற்றுவதற்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


