News October 21, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News January 27, 2026

பெரம்பலூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

பெரம்பலூரில் என்கவுண்டர்! மேலும் 6 பேர் கைது

image

திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தப்பி ஓட முயன்றதால், கொட்டு ராஜா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், வெள்ளை காளியை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 27, 2026

பெரம்பலூர்: பேருந்து – கார் மோதி விபத்து; 2 பேர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்து முன்னாள் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், காரில் பயணித்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தமுத்து (50) மற்றும் ஹரிஹரன் (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!