News November 22, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற நவ.24ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர்கள் மற்றும் நிறுவன விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர் இது தொடர்பாக புகார் மற்றும் குறைகள் இருப்பின் இக்கூடத்தில் பங்கேற்று, தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.02) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் வழங்கி தீர்வுகாணலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
பெரம்பலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கழனிவாசல், மங்களமேடு, நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.02) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, திருமந்துறை, பெருமாத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News February 2, 2026
பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், நன்னை துணைமின் நிலையத்தில் (02.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பரவாய், கிழுமத்தூர், ஓலைபாடி, எழுமூர், நன்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்செயர் பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.


