News December 10, 2025
பெரம்பலூர்: மகளிர் சங்கத்தில் வேலை வாய்ப்பு

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கவுரவ செயலாளர், ஒரு கௌரவ இணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
பெரம்பலுர் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம்,விஜயகோபா லபுரம், செல்லியம்பாளையம், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.
News December 14, 2025
குன்னம்: முப்பெரும் விழாவில் பங்கேற்ற அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி லப்பைகுடிகாடு பேரூராட்சி கிழக்கு ஜமாளி நகரில், லப்பைகுடிகாடு கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல் நடத்தும் முப்பெரும் விழா, மஸ்ஜித் குபா (பள்ளிவாசல்) திறப்பு விழா, ஷரீஅத் விளக்க விழா, நிஸ்வான் பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News December 14, 2025
பெரம்பலூர்: ரூ.96,210 சம்பளம்..வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


