News January 14, 2026
பெரம்பலூர்: பொங்கல் விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள திடலில், ஜன.15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த கலை விழாவை பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளிக்க மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News January 24, 2026
பெரம்பலூர்: செயல்பாட்டுக்கு வந்த புதிய திட்டம்!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் நடத்தப்படக்கூடிய வகையில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (23.01.2026) மாவட்ட ஆட்சியர் மிருநாளினி திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு மேம்பட இந்த உணவகம் ஒரு உதவியாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News January 24, 2026
பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

1.ஆதனூர் கைலாசநாதர் கோயில்
2.அணைபாடி ஆதீஸ்வரர் கோயில்
3.அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
4.அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
5.கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
6.இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
7.இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
8.கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
9.காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !
News January 24, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களுக்கு அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் (ம) சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்குதல் தொடர்பாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஜன.28 பெரம்பலூர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்; ஜன.29 வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


