News December 9, 2025
பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (டிச.12) போரளி, மங்கூன், கைகளத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் இருத்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான போரளி, கல்பாடி, அசூர், கே.புதூர், அடைக்கப்பம்பட்டி, மேலைப்புலியூர், அம்மாபாளையம், அய்யனார்பாளையம், நுத்தப்பூர். நெற்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை விநியோகம் இருக்காது.
News December 11, 2025
பெரம்பலூர்: அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் 12.12.2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில் 10.12.2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
News December 11, 2025
பெரம்பலூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….


