News June 7, 2024

பெரம்பலூர்: பயிர்களை தேர்வு செய்து பயன்பெற அறிவுறத்தல்

image

பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் கீதா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நிலத்தடி நீர் குறைவான இருக்கும் நிலையில் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்ப பயிர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். நீர் இன்மையால் பயிர்களை கருதுவதை தடுக்க குறைவான நீர் தேவையுள்ள பயிர்களை பயிர் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

பெரம்பலூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து

image

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்து பேச இருந்த நிலையில், நள்ளிரவு மேல் ஆகியும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கி.மீ தூரத்தில் தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால், பல மணி நேரமாக விஜயை காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.

News September 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் 5 இணையர்களுக்கு நாளை (14.09.2025) காலை 08.00 மணிக்கு இலவச திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி,
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

பெரம்பலூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

பெரம்பலூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!