News March 24, 2024
பெரம்பலூர் : பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா முன்னிட்டு கடந்த 16ம் தேதி மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News April 17, 2025
மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.10,000-கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேய மிக்கவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.5 ஆயிரத்துடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News April 17, 2025
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக, வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் நடைபெற உள்ளதென மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
பெரம்பலூர்: கோடை காலத்தில் மக்கள் செய்யக்கூடாதவை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, பொதுமக்கள் கோடை காலத்தில் எவையெல்லாம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், டீ, காபி, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் எனவும், மற்றும் வெற்றுக்காலுடன் வெயிலில் நடக்க வேண்டாம், . மேலும் முக்கியமாக குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.