News January 29, 2026
பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மணி, கூடலூர், கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.30) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, சில்லக்குடி, பிலிமிசை, கூடலூர், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News February 1, 2026
பெரம்பலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

பெரம்பலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 1, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் நாளை (பிப்.02) முதல் வருகிற 4-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
பெரம்பலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


