News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 31, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் பொதுமக்கள் வளர்க்கும் தங்களது கால்நடைகளை மின் கம்பிகள் மற்றும் மின்கம்பி அருகே கட்ட வேண்டாம் எனவும், நோய்க் கிருமி தொற்றுகள் பரவாத அளவிற்கு கிருமி கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும், எல்லா நேரத்திலும் சுத்தமான நீரை பருக வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
News October 30, 2025
பெரம்பலூர்: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News October 30, 2025
பெரம்பலூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


