News December 26, 2025
பெரம்பலூர்: தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய, டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் படிவங்களை முறையாகப் பூர்த்தி செய்வது மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது குறித்து அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டன.
Similar News
News December 29, 2025
பெரம்பலூர்: சகல தோஷங்கள் நீக்கும் அற்புத கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் திருவலாந்துறையில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் ஆலயம், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் உள்ள கிணற்றில் நீராடி மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, நெய் அபிஷேகம் செய்து பிராத்தனை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
கோரிக்கையை நிறைவேற்றிய பெரம்பலூர் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(டிச.29) திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு கொடுத்த மாற்றுத்திறனாளி முதியவரின் கோரிக்கை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உடனடியாக நிறைவேற்றினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
பெரம்பலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


