News December 13, 2025
பெரம்பலூர்: டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்

பெரம்பலூரை சேர்ந்த அமரஜோதி என்பவர் சென்னை செல்வதற்காக மொபைல் செயலி மூலம், தனியார் டிராவல்ஸ் பேருந்தை புக் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வராததால் வேறு பேருந்தில் சென்ற நிலையில், அன்று பணிக்கு விடுப்பு எடுக்கும் நிலமையானது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து தனியார் டிராவல்ஸ் பயணிக்கு ரூ.50,000, மனு செலவிற்கு ரூ.10,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News March 4, 2026
பெரம்பலூர்: திறனகம் எனும் சிறப்பு மையம் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
News March 3, 2026
பெரம்பலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

பெரம்பலூர் மக்களே, <
News March 3, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

பெரம்பலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


