News November 5, 2025
பெரம்பலூர்: கார் மோதி ஒருவர் பலி

பெரம்பலூர், அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசரப் அலி (58). இவர் தனது ஸ்கூட்டரில் சொந்த வேலை காரணமாக திருமாந்துறை வரை சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதேநேரத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரண்ணன் (36) மற்றும் 4 பெண்கள் ஒரு காரில், திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அயன்பேரையூர் பிரிவு சாலையில், அசரப் அலியின் ஸ்கூட்டர் மீது கார் மோதி, அசரப் அலி உயிரிழந்தார்.
Similar News
News November 5, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…
News November 5, 2025
பெரம்பலூர்: மினி பஸ்கள் இயக்க வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க, 2 புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 3, 2025 அன்று அரசிதழில் வெளியான இந்த வழித்தடங்களில், பேருந்துகளை இயக்க விரும்புவோர் நவம்பர் 7-ம் தேதிக்குள் பரிவாகன் இணையதளம் வழியாக ரூ.1500 கட்டணம் மற்றும் ரூ.100 சேவை கட்டணம் என மொத்தம் ரூ.1600 செலுத்தி பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


