News August 17, 2025
பெரம்பலூர்: கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் உதவி

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.
Similar News
News August 17, 2025
பெரம்பலூர்: மக்களே உஷாரா இருங்க! எச்சரிக்கை..

பெரம்பலூர்: ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!
News August 17, 2025
பெரம்பலூர்: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News August 16, 2025
பெரம்பலூர்: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி, Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500 முதல் Rs.88,638 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் இங்கே <