News March 18, 2024
பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2024 -ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அரியலூர் என்ற அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
பெரம்பலூர்: மின்வாரியத்தில் வேலை! ரூ.59,900 சம்பளம்!

பெரம்பலூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News September 3, 2025
பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

பெரம்பலூர் மக்களே! சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
News September 3, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் (11.09.2025) அன்று ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதில் சிறுபான்மையின மக்களுக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளதாக கூறியுள்ளார்.