News December 25, 2025

பெரம்பலூர்: கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது, கடந்த 2022ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜிவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.

Similar News

News December 27, 2025

பெரம்பலூர்: ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள்

image

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலை தில்லை நகரில் 13 பவுன் நகை, வெளிப்பொருட்கள், வெளிநாட்டுப் பணம்; நால்ரோடு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3¼ லட்சம், 44 கிராம் வெள்ளி நாணயங்கள், செல்போன்; ஆட்சியர் அலுவலகம் அருகே பீமநகரில் ஒரு வீட்டில் 3¾ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1,20,500 பணம்; வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6¾ பவுன் தாலிச்சங்கிலி என ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

News December 27, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay<>-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 27, 2025

பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? APPLY NOW!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!