News April 25, 2024
பெரம்பலூர் : கடிதம் அனுப்பும் போராட்டம்

மத வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், பெரம்பலூரில் தலைமை அஞ்சலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு கடிதத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர். இந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 27, 2025
அரும்பாவூர்: சிறுமியை கடித்த தெரு நாய்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் கிராமத்தில் தனது தாயுடன் பள்ளிக்கு சென்ற ஹாலிசா என்ற சிறுமியை அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிதத்தில் ஹாலிசா பலத்த காயம் அடைந்து கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் பெருமளவு நடைபெறுவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
News August 27, 2025
பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 27, 2025
பெரம்பலூர்: ஊர்க்காவல் படையில் பணியிடங்கள்!

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 17 பணியிடங்களுக்கு ஆண், பெண் இரு பாலருக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. விருப்பமுள்ளவர்கள் (28-08-2025) முதல் (25.09-2025) வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் 20 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் எனவும் மேலும் விவரங்களுக்கு 9894476223, 7092534474 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.