News September 22, 2025

பெரம்பலூர்: எமனாக வந்த நாய்; பெண் ஒருவர் பலி!

image

திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த குர்ஷித் பேகம் (54) என்பவர், அவரது மகன் சாதிக் பாஷா (30) உடன் தொழுதூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றபோது, பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் அருகே சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் சாதிக் பாஷா பிரேக் பிடித்துள்ளார். இதனால் குர்ஷித் பேகம் தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Similar News

News September 22, 2025

பெரம்பலூர்: வங்கி வேலை-ரூ.80,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <>https://www.ibps.in என்ற இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News September 22, 2025

பெரம்பலூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

பெரம்பலூர் மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 22, 2025

பெரம்பலூர்: கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துத் தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…

error: Content is protected !!