News October 24, 2025

பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

Similar News

News October 24, 2025

பெரம்பலூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் MRF டயர் தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (26) என்ற இளைஞர், பெரம்பலூர் நான்கு ரோடு மின் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 24, 2025

பெரம்பலுர்: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும்
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 24, 2025

பெரம்பலூரில் 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பில்லங்குளம், வெண்பாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த பாண்டியன், பார்த்திபன், மருதமுத்து, ராஜா, அருண், தனம், பவுனாம்பாள், செல்வக்குமார், மதியழகன், ராஜந்திரன், ஜெயபால், கோமதி ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிந்து; அவர்களிடமிருந்து மொத்தம் 573 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!