News January 13, 2026
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

“அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மற்றும் பாரத் நெட் ஒர்க் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதிகளில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டார்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நாளைக்குள்ளாக (ஜன.14) anfinet.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
பெரம்பலூர் மாவட்டத்தில் 77வது குடியரசு தின விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளும் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர். இந்நிகழ்வில் பேரணியும் சாகசமும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News January 26, 2026
பெரம்பலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<
News January 26, 2026
பெரம்பலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!


