News December 31, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், கருத்தரங்கம், கவியரங்கம் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வள்ளுவரின் சிலை இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று (டிச.30) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. வான்புகழ் கொண்ட வள்ளுவனின் புகழ் பரவட்டும், புத்தொளி பிறக்கட்டும்

Similar News

News December 20, 2025

பெரம்பலூர்: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தெரணி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி புதிய சட்டம் இயற்றி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைவு செய்யும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

News December 20, 2025

பெரம்பலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில்<<>> சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

News December 20, 2025

பெரம்பலூர்: விருது மற்றும் ரூ.1.50 லட்சம் பெற வாய்ப்பு

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சா்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருது மற்றும் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் 2025-2026 ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுபெற, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர், மாவட்ட ஆட்சியரகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!