News October 24, 2025
பெரம்பலூரில் 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

பெரம்பலூர் மாவட்டத்தில் பில்லங்குளம், வெண்பாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த பாண்டியன், பார்த்திபன், மருதமுத்து, ராஜா, அருண், தனம், பவுனாம்பாள், செல்வக்குமார், மதியழகன், ராஜந்திரன், ஜெயபால், கோமதி ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிந்து; அவர்களிடமிருந்து மொத்தம் 573 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
பெரம்பலூர்: சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பந்தட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் (24.10.2025) புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
News October 24, 2025
பெரம்பலூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் MRF டயர் தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (26) என்ற இளைஞர், பெரம்பலூர் நான்கு ரோடு மின் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News October 24, 2025
பெரம்பலுர்: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


