News February 4, 2025
பெரம்பலூரில் தமிழக அரசைக் கண்டித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பு

தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞர்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று (பிப்.03) தொடங்கியது. இதில் வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.120 ஆகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை திரும்பப் பெற வழக்குரைஞர்கள் செலுத்தும் ரூ.20 முத்திரைக் கட்டணத்தை, ரூ.100 ஆகவும் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Similar News
News September 22, 2025
பெரம்பலூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965 படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8-20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா பெரம்பலூர் தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம் 04328-224722 என்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் சிறந்த தளம் ஆகும். இந்த கோயிலுக்குச் செல்வதால் செல்வாக்கு, ஆட்சி அதிகாரம், அஷ்டலட்சுமி கடாட்சம், மற்றும் ஜாதகக் குறைகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும். குறைகள் நீங்குதல் போன்ற குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். அனைவர்க்கும் இதனை SHARE பண்ணுங்க!
News September 22, 2025
பெரம்பலூர்: 1லட்சம் பனை விதைகள் நடல்

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தக்கூடிய பனைமரக்காடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, தெரணி கிராமம் அயினாபுரம் சாலையில் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பனை விதைகளை நட்டனர்.