News September 10, 2025

பெரம்பலூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளதால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம் உட்பட நகர பகுதி முழுவதும் சிட்கோ ,காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், அருமடல், அருமடல் பிரிவு, எளம்பலூர், மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 10, 2025

பெரம்பலூர்: புதிய பேருந்து சேவை தொடக்கம்

image

இன்று திட்டக்குடி, வயலப்பாடி, புதுவேட்டக்குடி, துங்கபுரம், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் புதிய அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் அவர்களுடன் சிறுபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்து சேவையை துவங்கி வைத்தார்.

News September 10, 2025

பெரம்பலூர்: பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

image

பெரம்பலூர் ஒன்றியம், இலாடபுரம் ஊராட்சியில், ரூபாய் 5.00 கோடி மதிப்பீட்டில் இலாடபுரம் பிரிவு சாலை மேம்பாடு மற்றும் பாலம் கட்டும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 40.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, மற்றும்அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 43.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைத்தார்.

News September 10, 2025

பெரம்பலூர்: அமைச்சர் வேண்டுகோள்

image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில், மாநில அளவிலான அடைவுத்தோ்வு 2025 குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்: மாணவர்களின் கற்றலை ஆசிரியர் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

error: Content is protected !!