News November 16, 2025
பெரம்பலுர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய 600 கிறித்தவர்களுக்கு, மானியத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 550 பயணிகளுக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 வீதமும் மானியம் வழங்கப்படும். சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து 28.02.2026க்குள் சென்னை, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
Similar News
News November 16, 2025
பெரம்பலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

பெரம்பலூர் (நவம்16) நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தாள்-2 தகுதித் தேர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் பல்வேறு தேர்வு மையங்களில் நடைப்பெறுகிறது. பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், நடப்பு ஆண்டுக்காண ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
News November 16, 2025
பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு!

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் (நவ.17) நடைபெறுகிறது. இதனால் குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளை யம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, சிறுவயலூர், டி.களத்தூர்பிரிவு சாலை, குரூர், மாவிலிங்கை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.
News November 15, 2025
பெரம்பலுர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <


