News April 1, 2025

பெண் போல பேசி நூதன மோசடி

image

அரக்கோணத்தை சேர்ந்தவர் சத்தியநாதன், இவரிடம், 2 மாதங்களாக திருவாலங்காட்டை சேர்ந்த தினேஷ் என்பவர் பெண் போல மொபைல் போனில் பேசி பழகியுள்ளார். இதை உண்மை என நம்பிய வாலிபர் அவரை சந்திக்க வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த தினேஷ் மற்றும் 2 வாலிபர்கள் சத்தியநாதன் தாக்கி அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்துள்ளனர். இதுக்குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 2, 2025

தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்திய வீரராகவர்!

image

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். வைத்திய வீரராகவர் என்ற பெயரில் பெருமாள் அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால் எண்ணத்தால் உருவான பாவங்கள் மற்றும் தீராத நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தல பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு உள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

திருவள்ளூரில் நீட் எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 4  மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர், கடம்பத்தூர் -காக்கனூர் நடுநிலைப்பள்ளி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் -ஆவடி S.A பொறியியல் கல்லூரி, R.K பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு- அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் கோஜன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News April 2, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் மாராத்தான் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டரங்கில் வரும் ஏப்.6 அன்று காலை 6 மணிக்கு மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில், 16-36 வயதுடையோர் கலந்துகொள்ளலாம். போட்டியில், முதலில் வரும் ஐந்து ஆண்கள் & பெண்களுக்கு தலா ரூ.10000 வழங்கப்படும். <>முன்பதிவு<<>> செய்திட 7401703482, 8072908634 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்வும்*

error: Content is protected !!